உடல் நலம் : அயோடின் உப்பு ஓர் எச்சரிக்கை.






அயோடின் உப்பு ஓர் எச்சரிக்கை!
ஒரு போதும் வெண்மையான கல்உப்பை சுத்தமானது என்று நினைத்துக் கொண்டு வாங்க வேண்டாம். சாதாரண கோணிப் பைகளில் உள்ள உப்பையே வாங்குங்கள். நம் தாய்மார்கள், பாட்டிகள், முப்பாட்டிகள் அனைவரும் அதைத்தான் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தார்கள்.
அயோடின் கலந்த உப்பு ஆரோக்கியமிக்கது என்று டி.வி. விளம்பரங்களில் காட்டப்படுகிறது. உப்புடைய கவர்களில் Iodised Salt என்று முத்திரையிட்டு விற்பனையாகி கொண்டுள்ளது. நம் சமையலுக்காக கலக்கும் உப்பில் அயோடின் கலக்க வேண்டும். அப்போதுதான் “தைராய்டு நோய்’ வராது என்று மக்களுக்கு தவறான செய்திகளை மீடியாக்கள் பரப்பி வருகின்றன. மக்களும் நம்பி விட்டார்கள். காரணம் அவர்களுக்கு மருந்துகளைப் பற்றியோ மருத்துவத்தைப் பற்றியோ தெரியாது. பாமர மக்கள் அயோடின் கலந்த உப்பில் நன்மையுள்ளது என்று நம்பி வாங்க ஆரம்பித்து விட்டார்கள்.
அயோடின் என்பது ஒரு தாதுப் பொருளாகும். இந்த தாது உப்பு மண்ணிலிருந்து விளையும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் அந்தந்த உணவுப் பொருளின் தன்மைக்கேற்ப கலந்துள்ளது. எந்தவொரு உணவுப் பொருளும் அது இயற்கையாக விளைந்தால்தான் அது உணவு. உப்பு இயற்கை உணவாகும். இவர்கள் கலக்கும் அயோடின் இரசாயனமாகும். இயற்கையான உணவு சத்துக்களுக்கும் இரசாயன பொருள்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான். இயற்கையான உணவு சத்துக்கள் உயிருக்கு உயிர் ஊட்டக் கூடியவை. அதாவது நமக்கு வாழ்வுக்கு வளமூட்டக் கூடியவை. இரசாயனக் கலவையான வைட்டமின்கள், தாதுக்கள் என்ற பெயரில் சேர்க்கும் இரும்புச்சத்து, அயோடின் போன்றவை உயிரைக் குடிக்கும் உயிர்க் கொல்லிகள். இயற்கைக்கு உயிர் ஓட்டம் உண்டு. இரசாயனத்திற்கு நோயுற்ற நிலையும் இறுதியில் மரணமும் தான்.
தைராய்டு என்றால் என்ன? அயோடினுக்கும் தைராய்டுக்கும் உள்ள தொடர்பு யாது? என்பதை நாம் தெரிஞ்சுக்குவோம். தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள ஒரு சுரப்பியாகும். அது சுரக்கும் சுரப்பு நீர் தைராக்ஸின் ஆகும். இந்த தைராக்ஸின் இரத்தத்தில் கலக்கிறது. இந்த சுரப்பு நீர் உடல் வளர்ச்சிக்கும் இயக்கத்திற்கும் இன்றியமையாததாகும். இந்த சுரப்பு நீர் அதிகமாக சுரந்தால் உடல் உறுப்புகளின் இயக்கம் அதிகமாகும். தைராய்டு நீர் மிகவும் குறைந்து விட்டாலும், உடல் இயக்கம் குறிப்பாக இருதய இயக்கம் குறைந்து நின்று விடவும் வாய்ப்புண்டு. நம் இரத்தத்தில் போதுமான அளவு அயோடின் இரந்தால் போதுமான அளவுக்கு தைராய்டு ஹார்மோன் சுரக்கும். அயோடின் அளவு அதிகரித்தால் அதிகளவு ஹார்மோன் சுரந்து சுரப்பி வீக்கமடைகிறது. பின்னர் கடினமாகவும் மாறுகிறது. தைராய்டு நோய் உள்ளவங்க, இல்லாதவங்க என்று வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அயோடின் கலந்த உப்பை சாப்பிடும் போது, அயோடின் உப்பு காரணமாக தைராய்டு ஹார்மோன், ஆரம்பத்தில் அதிகமாகி பின்னர் நாளடைவில் வெகுவாக குறைந்து விடுகிறது.
அயோடின் உப்பையே நீண்டகாலமாக உட்கொண்டு வரும்போது தைராய்டு ஹார்மோன் சுரப்பி நின்று விடுகிறது. மனநிலையில் நேர் மாற்றமான விளைவுகளும் தோன்றுகிறது. மனச்சோர்வும் இனம் புரியாத பயமும் தோன்ற ஆரம்பிக்கும். குறிப்பாக பெண்களின் குழந்தைகளின் நலமான வாழ்வைப் பாதிக்கும். பெண் குழந்தைகளுக்கு அயோடின் உப்பைக் கொண்டு சமைத்து பறிமாறப்படும் உணவு அவர்கள் பூப்பெய்தும் போது பல சிக்கல்களை ஏற்படுத்தும். பெண்களுக்கு அயோடின் காரணமாக தைராய்டு ஹார்மோன் அதிகமாக சுரக்கும் போது அடிக்கடி மாதப்போக்கு ஏற்படும். மாதத்திற்கு 2 () 3 முறை ஏற்படும். மாதப் போக்கு இல்லாத வேளைகளில் வெள்ளைப்போக்கு ஏற்படும். கருப்பையில் புண் ஏற்படும். அதனால் சிலருக்கு கருப்பையையே அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த செய்தியால் அயோடின் உப்பைப் பற்றி உங்களுக்கு விவரித்து இருப்பது மிக மிக குறைவேயாகும். சொல்லாதது நிறைய உள்ளது.
இயற்கையாக விளையும் உப்பானது கல் உப்பே ஆகும். இந்த உப்பு லேசான இந்த பூமியில் மண் எந்த நிறத்தில் இருக்கிறதோ அதனைச் சார்ந்து இருக்க வேண்டும்.

Comments

Popular Posts