நெல்லி கூந்தல் தைலம் தயாரிப்பது எப்படி?

நெல்லி கூந்தல் தைலம் தயாரிப்பது எப்படி?
தேவையான பொருள்கள்:
நெல்லி சாறு - 1 லிட்டர்
தேங்காய் எண்ணெய் - 1 லிட்டர்
கரிசலாங்கண்ணி இலை
பொன்னாங்கண்ணி இலை.
ஆவாரம்பூ
நெல்லி சாறு அளவில் நான்கில் ஒரு பங்கு வரும் அளவு மேலே சொன்ன இலைகள், ஆவரம்பூவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை:



ஒரு லிட்டர் நெல்லி சாறு எடுக்க 10 கிலோ நெல்லிக்காய் தேவைப்படும். கரிசலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, ஆவாரம்பூ ஆகியவற்றை நன்கு காய வைத்து பொடி செய்யவும்.








நெல்லி சாறு, மேலே சொன்ன பொடி ஆகியவற்றை கலந்து கொதிக்க விடவும். நெல்லி சாறு மூன்றில் ஒரு பங்காக சுருங்கும் வரை கொதிக்க விட வேண்டும்.



இப்போது தேங்காய் எண்ணெய் சேர்த்து திரும்பவும் கொதிக்க விட வேண்டும். தைலம் சரிபாதியாக சுருங்கும் வரை காய்ச்ச வேண்டும்.








அவ்வளவுதான். நெல்லி கூந்தல் தைலம் தயார். இது கடையில் வாங்கும் எந்த கூந்தல் தைலத்தை விடவும் அதிக நெல்லிக்காய் சத்தை கொண்டிருக்கும் என்கிறார் திரு.ராஜேந்திரன்.

Comments

Popular Posts