பனை மரத்தில் தொங்கும்
தூக்கணாங்குருவிக் கூடுகள்
கிணற்றோரக் கம்பிகளில்
சிட்டுக்குருவி
குக்கூவெனக் குரலெடுக்கும்
அக்கா குருவிகள்
சோளக்காட்டில் கும்மாளமிடும்
சூறைக்குருவி
தென்னை குருத்துக்காய்
சண்டையிட்ட மரங்கொத்திகள்
நெல்லின் மணிக்காய்
புறாக்கூட்டம்
காதோரம் ரீங்காரமிட்ட வண்ண வண்டுகள்
வானவில்லின் வண்ணங்களாய்
ஊசித்தட்டான்களும்,தும்பிகளும்,
வண்ணத்துப்பூச்சிகளும்
பார்த்த நினைவில்
மகனை அழைத்தேன்
அடுத்த வாரமாவது
தோட்டத்திற்கு போகலாமா?
நகரத்தில் வளர்ந்த மகன் சொன்னான்
நண்பர்களுடன் அடுத்த வாரம்
பேர்ட் வாட்சிங்(bird watching) போறோம்மா என....
- எழில்

Comments

Popular Posts