எதிலும் உழவனுக்கு வஞ்சனையே..

#வயலும்_வாழ்வும்
#எதிலும்_உழவனுக்கு_வஞ்சனையே...
ஒரு உழவன் விதை நெல் வாங்க போனால் கடை காரங்க சொல்லும் #விலைக்கு வாங்க வேண்டுமாம்...
உழவன் நாற்றாங்கல் வைத்தால் வரப்பு வைத்து களை எடுக்க வரும் வேலையால் சொல்லும் கூலி கொடுக்க வேண்டுமாம்...
உழவன் ஒரு வயலை உழுது சமன் செய்ய உழவு வண்டிகாரர் சொல்லும் #கூலியை கொடுக்க வேண்டுமாம்...
உழவன் ஒரு வயலை நடுவதற்கு நடவு ஆள் சொல்லும் #கூலியை கொடுக்க வேண்டுமாம்...
உழவன் அந்த வயலுக்கு தேவையான உரம், பூச்சி மருந்து போன்றவற்றை வாங்க சென்றால் கடைகார் சொல்லும் #விலையை கொடுக்க வேண்டுமாம்...
உழவன் வாங்கிய உரம் ,பூச்சி மருந்து போன்றவற்றை அந்த வயலுக்கு இட கூலி ஆட்கள் சொல்லும் #கூலியை கொடுக்கவேண்டும்....
உழவன் இப்படி எல்லா செலவுகளையும் செய்து வறட்சி, வெள்ளம் எல்லாவற்றையும் சமாளித்து அறுவடைக்கு வரும் போது அறுவடை வண்டிகாரர் சொல்லும் #கூலியை அறுவடை செய்ய கொடுக்க வேண்டுமாம்..!!!
இவற்றை எல்லாம் தாண்டி அறுவடை முடிந்த பிறகு அந்த நெல்லை உழவன் விற்க வேண்டும் என்றால் அப்போது கூட அந்த விவசாயி அந்த நெல்லுக்கு #விலை சொல்லமுடியாது வியபாரியும், அரசாங்கமும் சொல்லும் விலைக்கு தான் விற்கவேண்டுமாம்...
நிலைமை இப்படியாக இருக்க, தான் #விளைவித்த_பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய உரிமையில்லை???
#என்னகைய்யா_உங்க_நியாயம்...????
இங்ஙனம்..
விளைவித்த பொருளுக்கு விலை பேச முடியாத உழவனான #உழவர்க்குடி

Comments

Popular Posts