விவசாயம் ஓர் அலசல்










இயற்கை
விவசாய காலனி !
இயற்கை விவசாயத்தைப் பற்றி சமூக அக்கறையோடு இன்று பலரும் பேசிவருவதையும் காணமுடிகிறது. பலரும், பலவிதமான வழிகளில் உலகமக்களுக்கு இதைப் புரியவைக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகின்றனர் என்கிற செய்தி மகிழ்ச்சியையும் சற்று ஆறுதலையும் அளிக்கிறது. ஆனால் இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிமருந்துகள் பயன்படுத்திச் செய்யப்படும் இன்றைய விவசாய முறைகளை ஒப்பிடும் பொழுது மிகக் குறைந்த விழுக்காட்டு மக்களே இயற்கை விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். நம்முடைய மரபு வழி விவசாயத்தைப் பற்றிய புரிதலும் அதன் மகத்துவமும் தெரியாத காரணத்தால் இரசாயன விவசாய முறைகளில் தாங்களும் கட்டுண்டு, கடன்பட்டு விவசாய நிலமும் பாழ்பட்டு விளையும் பொருள்களிலும் கேடுநிறைந்தவையே அறுவடை செய்யும் நிலையில் இன்று நவீன விவசாயம் இருக்கிறது.
பாரம்பரிய விவசாய முறைகளில் இருந்து விலகி வெகு தொலைவு வந்துவிட்டது இன்றைய நவீன விவசாயம், எங்கும் எதிலும் நவீனமயம் என்பது நமது பாரம்பரிய விவசாயத்தை அழிக்கும் வேலையை வேகமாகச் செய்து வருகிறது. இன்று குற்றுயிரும் குலை உயிர்ப்பினைத்தர இயற்கை விவசயமுறைகளில்தான் முடியும்.
ஏராளமாய் பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயன உரங்களாலும் பூச்சிக் கொல்லி மருந்துகளாலும் மண்ணின் உயிர்த்தன்மை எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கும்? என்று அனைவரும் யோசிக்க வேண்டாமா? அனைத்து ஜீவ ஆதாரங்களையும் இரசாயனங்களை கொண்டு அழித்து விட்டால் பிறகு எப்படி எதைக் கொண்டு நாம் உயிர் வாழ்வது?
இரசாயனத்தால் விளைவிக்கப்படும் உணவுகளால் தான் மனிதர்களுக்கு நோய் வருகிறது என்று கூறி இயற்கை விவசாயத்தை ஆதரித்தும் இயற்கை உணவுகளை சாப்பிடச் சொல்லி சமூக அக்கறை உடையவர்கள் வேகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க அதை விட வேகமாக எந்தக் குறையுமின்றி இரசாயன உர விற்பனையும், பூச்சிக் கொல்லி மருந்துகளும் கோடிக்கணக்கில் விற்கப்படுவதும், பயன்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரசாயனமாற்ற உணவுகள் இன்று யாருக்குமே கிடைப்பதில்லை. ஆனால் நம் அனைவரின் தேவையும் இயற்கை உணவுகள் தாம்.
ஏன் இந்த முரண்பாடு?
மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் கொஞ்சம் பேர் இருந்தால் போதுமா? ஒட்டுமொத்தமாக எல்லா மக்களுக்கும் தங்கள் நலனில் ஆர்வமும், அக்கறையும் இருந்தால் தான் இயற்கை விவசாயம் நூறு சதவிகிதம் மக்களுக்குப் பயன்படும்.
எனவே பொதுமக்களாகிய நாம் இதற்கு உடனடியாக ஒரு முடிவு கட்ட வேண்டும். இயற்கை விவசாய முறைகளில் விளைவிக்கப்படும் உணவுகளை நாம் விரும்புவதைவிடவும் மிக முக்கியமானது, அனைத்தையும் இயற்கை விவசாய முறைகளுக்கு மாற்றுவது. அது தான் மக்களுக்கு சிறந்ததாகவும் நிரந்தரத் தீர்வாகவும் இருக்கும்.
இயற்கை விவசாயத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மறைந்த வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் அவர்கள் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் களப்பணி ஆற்றினார். இயற்கை விவசாயத்தில் மரபு ரீதியான அணுகுமுறைகளுடன் ஆய்வு செய்து அதை விவசாயிகளுக்கு பல பயிலரங்குகள் மூலம் தான் அறிந்தவற்றை அவர் கற்பித்து வந்தார். தற்பொழுது வட இந்தியாவைச் சேர்ந்த சுபஷ்பாலேகர் என்பவரும் நாடெங்கும் சென்று இயற்கை விவசாயத்தினைப் பரப்பி வருகிறார். இதனுடன் பல சமூக தொண்டு நிறுவனங்களும் இணைந்து இயற்கை விவசாயத்திற்கு பாடுபட்டுவருகின்றனர். அந்த முறையில் உலக மக்களுக்கு , இயற்கை விவசாய செயல் முறைகளை எடுத்துக் கூறவும், அது தொடர்பான வழிகாட்டுதலையும் சில முன்னோடி இயற்கை ஆர்வலர்களின் உதவியுடன் அதைப்பற்றி நாம் உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறோம். அது இயற்கை விவசாயத்திற்கு நல்ல வழிகாட்டுதலாகவும், சிறந்த தீர்வாகவும் இருக்கும் என நம்புகிறேன்.
இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை நாம் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால், அது விவசாயிகள் சம்பந்தப்பட்ட விசயம் நமக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லையே? இயற்கை விவசாயத்தைப் பற்றி நான் தெரிந்து கொண்டு என்ன ஆகப்போகிறது? இந்த ரீதியில் தான் பெரும்பாலானவர்களின் மனநிலை இருக்கிறது.
உதாரணமாக நீங்கள் கம்ப்யூட்டர் இஞ்சினியராக இருக்கலாம் அல்லது மளிகை கடை வைத்து நடத்தி வருபவராகவோ, ஆட்டோ ஓட்டுநராகவோ அல்லது ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவியில் இருப்பவராகவோ இருக்கலாம். ஆண்களே இப்படி எனில் பெண்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? நீங்களும் வேலைக்குச் செல்பவர்களாகவோ இல்லத் தரசிகளாகவோ இருப்பீர்கள், உங்களிடம் இயற்கை விவசாயம் குறித்துப் பேசினால் என்ன சொல்வீர்கள் தெரியுமா?
“ இதையெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்? “
விவசாயிகளிடம் போய் சொல்லுங்கள்” “ என்றுதான் பதில் வரும். முதலில், ஒரு விசயத்தை அனைவரும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். விவசாயம் என்பது நாம் எல்லோரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டிய விசயமே தவிர விவசாயிகள் மட்டும் யோசிக்கக்கூடிய விசயம் அல்ல. ஒவ்வொரு தினமும் காலை முதல் இரவு வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் விவசாயத்தை நம்பித்தான் உலக மக்கள் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.
விவசாயம் இல்லையென்றால் உலகமே இல்லை. மக்கள் உயிருடன் இருக்க முடியாது. சாப்பிடுவதற்கு ஒன்றுமே இருக்காது. இதை யாரும் புரிந்து கொள்ளுவதே இல்லை. எனவே இதன் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்துகிறோம். அதன் பெயர் இயற்கை விவசாய காலனி.
இந்தத்திட்டத்தின் அடிப்படை விசயம் என்னவெனில் நமக்கு நாமே இயற்கை விவசாயம்.
பல பேர் “ இயற்கை விவசாயம் என்பது இன்று நடைமுறையில் சாத்தியப்பட்டுவராது எனவே ஏன் அதையெல்லாம் பேசி உங்கள் நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிரீர்கள்?” என்று கூறுகிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் ஒரு அன்பான வேண்டுகோள் தயவு செய்து இயற்கை விவசாயம் நடைமுறையில் சாத்தியமில்லை என்று இனிமேல் யாரும் பேச வேண்டாம். நாம் அனைவரும் ஒன்று கூடி முயற்சித்தால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை. விவசாயத்தை இயற்கையாக மாற்றினால் மட்டுமே மக்கள் நோய்நொடியின்றி ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இயற்கை விவசாயம் என்பது இந்தத் தலைமுறையினர் நன்றாக இருப்பதற்கு மட்டுமல்ல வருங்கால சந்ததியினருக்கும் அவர்களின் வளமான வாழ்விற்கும் ஆரோக்கியதிற்குமான தொலை நோக்கும் திட்டம் தான் இயற்கை விவசாயம்.
பொதுவாக மனிதர்கள் அனைவரும் பணம் சம்பாதிக்கிறார்கள் எனில் அதற்கான காரணம் தங்களின் உயிர்வாழ்தலுக்கு, தேவையானவற்றை பெறுவதற்கு என்பது மட்டும் தான். அதே சமயம் தாங்கள் சம்பாதித்த அத்தனை செல்வங்களையும் தங்கள் வாழ்நாள் முடிவதற்குள்ளாகவே அவற்றை அனுபவத்தித் தீர்த்துவிடலாம் அல்லவா?
ஆனால் அப்படிச் செய்யாமல் கார், பங்களா, நகை வங்கிகளில் இருப்பு என தங்களின் செல்வங்களைத் தங்கள் வாரிசுகளுக்காகவும் பேர்ப்பிள்ளைகளுக்காகவும் சேர்த்து வைக்கிறார்களே என்ன காரணம்?
தங்களுடைய வாரிசுகள் வருங்காலத்தில் எந்தக் குறையுமின்றி மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக, நிம்மதியாக, வளமாக வாழ வேண்டும் என்ற காரணத்திற்காகத்தானே ஒவ்வொருவரும் பாடுபட்டு சொத்துக்கள் சேர்க்கின்றனர்?
இயற்கை விவசாயத்தையும் அதே போல பிற்கால சந்ததியினரை மனதில் வைத்து கொண்டு அக்கறையாக அதை காப்பற்றினால்தான் அவர்களின் ஆரோக்கியவாழ்விற்கு உத்திரவாத மான அடிப்படை ஆதாரம் நிலையாக இருக்கும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.
இயற்கை விவசாயம் என்பது விவசாயிகளுக்கான ஒன்று என்று கருதாமல் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டிய மிக முக்கியமான ஒன்று என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு அதற்கான செயல்முறைத் திட்டங்களைப் பார்ப்போம்.
விவசாயம் என்றாலே பெரிய அளவில் விவசாய நிலம் தேவைப்படுமே நமக்கு அதற்கு வழி இல்லையே என்று யாரும் யோசிக்க வேண்டாம்.
நமது வீட்டிற்கு அருகிலேயே உள்ள காலியிடத்தில், மொட்டை மாடியில் என்று இருக்கக் கூடிய இடத்திலேயே நமது வீட்டிற்குத் தேவையான காய்கறிகள் கீரைகளை இயற்கை முறையில் வளர்த்து பயன்படுத்தலாம். எந்தக் காய்கறிகளோ, கீரைகளோ இனி கடைகளுக்குச் சென்று வாங்க வேண்டியதில்லை நம் வீட்டிலேயே இலவசமாக அது கிடைப்பதற்கான வழி இருக்கிறது.
வீட்டிற்கு இனி அரிசி வேண்டுமென்றால் கூட நாமே பயிரிட்டு இயற்கையாக விளைவித்து சமைத்துச் சாப்பிடலாம். தக்காளி, கத்தரி, வெண்டை, தேங்காய் என நம் அன்றாட உணவிற்குத் தேவையான அனைத்தும் எந்த இரசாயனக் கலப்பு மின்றி நாமே விளைவிக்க முடியும். இதற்கு வீட்டின் அருகில் சிறிது காலி இடம் இருந்தால் போதும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் வீட்டின் அருகில் சிறிதளவு இடமிருந்தால் இவ்வளவையும் செய்து விட முடியுமா? பரவயில்லையே என்பீர்கள்.
ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் வேறு இடவசதி இல்லாதவர்களும் என்ன செய்வது என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறது அல்லவா?
இதற்காக ஒரு அருமையான திட்டம் ஒன்று இருக்கிறது. இதனை உலக மக்கள் அனைவரும் சிறப்பாக செயல்படுத்தி வெற்றி காணமுடியும் அவ்வளவு சிறந்த எளிமையான திட்டம் இது. இந்தத் திட்டத்திற்குப் பெயர் இயற்கை விவசயகாலனி.
Nature O Master எனும் பெயரில் நாம் புதிதாக இந்தத் திட்டத்தை துவக்கி இருக்கிறோம் அதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.
இயற்கை விவச்சயத்தினைப் பொறுத்தவரை இந்தத் திட்டம் முழு அளவில் வெற்றிபெற நான் ஒருவன் மட்டும் இதனைச் செயல்படுத்தினால் போதாது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தத்திட்டத்தினை செயல்படுத்த முன்வரவேண்டும். இந்தக்கட்டுரையை படிக்கும் நீங்களும் இந்தத் திட்டத்தினைப் பற்றி அறிந்து கொண்டு அனைவரும் சேர்ந்து செயல்படுத்த முன்வரவேண்டும். ஒவ்வொரு வரும் தங்கள் பகுதிகளில் இதை செயல்முறைபடுத்த வேண்டும். எந்த ஊர் மாநிலம் அல்லது நாடு என்று பாகுபாடு எதுவுமின்றி அவரவர் அந்தந்தப் பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய செயல்முறைத் திட்டம் இது.
நமது இயற்கை விவசாய காலனி எனும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் ஐந்து குடும்பங்கள் அல்லது ஐம்பது பேர்களுக்குத் தேவையான உணவு, காய்கறிகள் போன்றவற்றை அதில் விளைவித்துக் கொள்ளலாம். இயற்கை முறையில் எந்த இரசாயனக் கலப்புமற்ற உணவுகளை இந்த ஐம்பது நபர்கள் திருப்தியாக சாப்பிட்டு நிம்மதியாக உயிர் வாழலாம். ஐம்பது முதல் நூறு நபர்களுக்கு இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் உணவுகள் போதுமானதாக இருக்கும். இனி இந்தத் திட்டத்தினை எவ்வாறு செயல்படுத்துவது என்று பார்ப்போம்.
ஓர் ஏக்கர் நிலம் விளை நிலமாக இருந்தால் நன்றாக இருக்கும். ஒரு வேலை தரிசு நிலமாக இருந்தாலும் அதை விலை நிலமாக மாற்றுவதற்கு வழிகள் இருக்கின்றன அதைக் கொண்டு நிலத்தின் தன்மையை மாற்றிடலாம். இந்த ஒரு ஏக்கர் நிலத்தில் 810 வகையான மரவகைகளை நடவேண்டும். அடுத்து 400 வகையான தாவரங்களை நட வேண்டும். இதற்கான கன்றுகள் மற்றும் விதைகள் பாரம்பரிய ரகங்களாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இத்தகைய பாரம்பரிய ரக மரக் கன்றுகள் மற்றும் விதைகளை நிறையப்பேர் சேகரித்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். திருப்பூர், சென்னை என்று பல ஊர்களிலும் பல நாடுகளிலும் பாரம்பரிய ரகங்களைப் பயிரிடுவதும் அவற்றின் விதைகளை சேமித்து வைக்கிறவர்களும் பலர் இருக்கின்றனர். இவர்களை எல்லாம் கண்டறிந்து ஒருங்கிணைத்து நாமும் அவர்களுடன் சேர்ந்து பாரம்பரிய ரக விதைகளை நாம் சேமித்து வைக்கும் பணியிலும் இயற்கை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறோம்.
ஆனால் தற்பொழுது சந்தைகளில் விற்கப்படும், பழங்கள், காய்கறிகளில் விதைகள் என்பதே இருப்பதில்லை ( Seedless) ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி என்று எதிலும் விதைகள் இல்லாத ரகங்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. விதை இல்லாத உணவுகளை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வரும்பொழுது நமக்கும் அது இல்லாமல் போய்விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
அதாவது விதை உள்ள காய்கறிகள், பழங்கள் மட்டும் தான் நமக்கு வீரியத்தையும் ஆரோக்கியத்தையும் அளிக்கமுடியும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எல்லா வகை காய்கறி, பழங்களிலும் விதைகள் அவசியம் இருக்க வேண்டும். அவை இல்லாமல் போகும் பட்சத்தில் நமக்கும் அதே நிலை வந்துவிடும். எனவே மரபணுமாற்றப்பட்ட உணவுகளை அறவே தவிர்ப்போம்.
உலக மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதற்காகவே இவ்வாறு மரபணுமாற்றப்பட்ட காய்கறிகள், பழ ரகங்களை உற்பத்தி செய்து வருகின்றன சில அமைப்புகள். உலகை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கிறது அந்த அமைப்பு. தங்களின் சுயலாபத்திற்காக இத்தகைய காரியங்களில் ஈடுபட்டு வந்தவர்களின் சுய ரூபத்தை மக்கள் அறிந்து கொண்டனர். எனவே அவர்களின் நோக்கம் இனிமேல் பலிக்காது. நம்முடைய பாரம்பரிய ரகங்கள் ஆங்காங்கே சேமிக்கப் பட்டிருந்தவை மீண்டும் நம் பயன்பாட்டிற்கு வந்து விட்டது.
மரபணுமாற்றம் செய்து விளைவிக்கப்படும் காய்கறி, பழங்களில் சிறிதளவும் மரபுரீதியான சத்துக்கள் இருப்பதில்லை. எனவே அதை சாப்பிடும் மக்களுக்கு பெயரளவிற்கு சாப்பிட்ட உணர்வு இருக்குமே தவிர உடலுக்கு சக்தி கிடைப்பதில்லை. முந்தைய காலகட்டத்தில் இயற்கையில் விளைந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்த மக்கள் இன்று செயற்கையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை உண்டு ஏராளமான வியாதிகளினால் சிக்குண்டு மருந்து, மாத்திரைகளினால் நாட்களைக் கடத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதற்கு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் மரபணுமாற்றப்பட்ட ரகங்களும், இரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லிகளும் தான் முக்கியக் காரணம்.
நம்முடைய பாரம்பரிய விதை ரகங்களை அழித்து விட்டு செயற்கை ரகங்களை வெளிநாட்டிலிருந்து நாம் இறக்குமதி செய்து மரபணுமாற்றப்பட்ட விவசாயமுறைகளைப் புகுத்த வேண்டும் இன்று எண்ணுகிற சக்தியினை நாம் வேரோடு சாய்க்க வேண்டும். நம் பாரம்பரிய விதைகள் அரிதானவையாக என்று மாறிப் போனதற்கு மரபனுமாற்றத்தை ஆதரிப்பவர்களே காரணம். பல இலட்சக்கணக்கான நம் பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டுவிட்டன. அவை இருந்த சுவடே இன்று இல்லை. இன்று மீத மிருக்கும் கொஞ்ச ரகங்களையும் நாம் காப்பாற்றாமல் விட்டுவிட்டால் நம் நிலை என்னாகும்?
எனவே யாரோ சில பேர் மட்டும் பாரம்பரிய விதைகளை வைத்துக் கொண்டிருந்தால் போதும் என எண்ணாமல் அனைவருமே தங்களால் இயன்ற தங்களுக்குக் கிடைக்கின்ற நம் பாரம்பரிய விதைகளை சேமித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது இன்றும் சரி. நமக்குப் பின்னர் வரக்கூடிய சந்ததியினருக்கும் அது பேருதவியாக இருக்கும். இந்த வேண்டுகோள் உலக மக்கள் அனைவருக்குமானது. எனவே தயவு செய்து சேகரித்து வையுங்கள். மற்றவர்களுக்கும் அதைக் கொடுத்து உதவுங்கள்.
எனவே நான் ஒரு திட்டத்தை இங்கு விவரிக்கிறேன் எனில் அதை நான் மட்டும் செயல்படுத்துவதால் மட்டும் நிறைவேறாது நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதில் ஈடுபட்டால்தான் வெற்றி பெற முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன். ஒரு திட்டத்தை எப்படி செய்யலாம் என்ற யோசனையை உங்களுக்குத் தருகிறேன் எனவே நானே முழுவதும் செய்து தருவேன் என நீங்கள் எண்ணக் கூடாது. மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டால் உங்கள் தேவைக்கு நீங்களே வேண்டிய பொழுது மீன் பிடித்துக் கொள்வீர்கள் அல்லவா, இதைப் போன்றுதான் உங்களுக்கு நான் விவரிக்கப்போகும் இந்த திட்டம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் ( இயற்கை விவசாய காலனியில்) என்னவேனில் இருப்பதிலேயே உயரமாக வளரக்கூடிய மறக்கன்றுகளைதான். அடுத்து சிறு மரவகுப்புகளை சேர்ந்த மரக்கன்றுகளை நடவேண்டும். நெடுமர வகைகளிலும் சிறுமர வகைகளிலும் சிலவற்றில் கொடிபோல் படர்ந்து இருப்பவை இருக்கும். சிலவற்றில் இல்லாமலும் இருக்கலாம் அடுத்து புதர்கள் போன்று செடிகொடிகள் அடர்த்தியாக வளர்க்க சிறு பகுதி, அடுத்து காய்கறிகள், பருப்பு வகைகள் என்று விதவிதமாகக் பிரித்து எல்லாவற்றையும் திட்டமிட்டுப் பயிரடவேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் 40,000 வகைகளைப் பயிர் செய்யலாம் என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் உண்மை....
40,000 வகைகளும் ஏதோ ஒன்று இரண்டு என்று இல்லாமல் நமக்கு எவ்வளவு தேவையோ, அவ்வளவு பயிரிடலாம். உதாரணத்திற்கு சில ரகங்கள் நூறு எண்ணிக்கை நட்டு வளர்க்க வேண்டும் என்று விரும்பினால் அப்படிச் செய்யலாம். கரும்பில் ஐம்பது, கொய்யா இருபது என எத்தனை எண்ணிக்கை நமக்கு வேண்டுமோ, அவ்வளவு நாட்டு வளர்க்கலாம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் நமக்குத் தேவையான எல்லாத் தாவரங்களும் இருப்பது போலப் பார்த்துக்கொண்டு திட்டமிட்டு பயிர் செய்வதுதான் நல்லது. மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விவசாயம் என்னவெனில் அனைத்தும் பாரம்பரிய ரகங்களாக இருக்க வேண்டும்.
எல்லாம் சரி, மிக முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்கள். “ இந்த ஒரு ஏக்கர் நிலத்திற்குப் பாசனம் செய்ய தண்ணீர் வசதி வேண்டாமா? கிணறு, போர்வெல் என்று ஏதாவது வேண்டுமே. அதற்கு என்ன செய்வது?” என்று தானே கேட்கிறீர்கள்?
ஆனால் ஒரு உண்மை என்ன தெரியுமா? இந்த ஒரு ஏக்கர் நிலத்திற்கு தண்ணீரே தேவையில்லை தண்ணீரே இல்லாமல் விவசாயம் செய்யமுடியும்.
அது எப்படி தண்ணீர் இல்லாமல் விவசாயம் பார்ப்பது? என்பீர்கள் அதற்கும் வழி இருக்கிறது.
பயிர் வகைகளை நடவு செய்வதற்கு முன்பே 15௦ மீட்டருக்கு ஒரு பள்ளம் வீதம் சிறு குட்டை போல் நிலத்தில் பறித்து தயார் செய்து விடவேண்டும். அந்தக்குட்டையில் மழை பெய்யும் சமயங்களில் எல்லாம் அதில் நீர் சேகரிக்கப்பட்டுவிடும் இவை பல வருடங்களுக்கு முன்பாகவே செயல் திட்டமாக இந்த மாதிரி குட்டைகளை வடிவமைத்து நீர்த்தேவையை சமாளித்திருக்கிறார்கள். எனவே நாம் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம். எந்தெந்த செடிகளுக்கு அல்லது மரங்களுக்கு நிறையத் தண்ணீர் தேவைப்படுமோ அதை கருத்தில் கொண்டு குட்டையை அதன் அருகில் அமைக்க வேண்டும். தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் தாவரங்களை குட்டையிலிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும்படி ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். இந்த மாதிரித் திட்டத்தை வைத்துக் கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தினை தயார் செய்யவேண்டும்.
ஒரு மாடு இந்த விவசாயப் பணிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதால் அதையும் வளர்த்து வரவேண்டும். ஒரு மாடு இருந்தால் 40 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ளலாம். எனவே ஒரு ஏக்கர் நிலத்திற்கு மாடு எதற்கு என்று யாரும் எண்ண வேண்டாம். கட்டாயம் ஒரு மாடு வளர்த்து வரவேண்டும்.
நெல் முதலிய தானியங்களை விளைவிக்க ஏராளமான நீர் வசதி வேண்டும் 12௦ நாட்கள் முதல் 18௦ நாட்கள் வரை கூட அவற்றை அறுவடை செய்யும் வரை வளர்த்துவரவேண்டும் என நினைத்திருந்தால் அதை இனிமேல் மாற்றி விடுங்கள். ஏனெனில் எந்த தண்ணீர் வசதியுமின்றி 15 நாட்கள் முதல் 5௦ நாட்களுக்குள் விளைவித்துவிட முடியும். நம்முடைய நிலத்தில் இயற்கையாக நெல்லை காணமுடியும் . நம் திட்டத்தினைக் கடைபிடித்தால் பாலிஸ் செய்யப்படாத, ரசாயனக் கலப்பற்ற தூய்மையான கைக்குத்தல் அரிசியை உணவாக்கிக் கொள்ள முடியும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் இவை அனைத்தும் செய்து விட முடியும் பொழுது அதற்கு மேற்பட்டு 2 ஏக்கர், 3 ஏக்கர் நிலம் இருக்கிறது எனில் இன்னும் பிரமாதமாக இயற்கை விவசாயம் செய்து விடலாம் ஐந்து ஏக்கர் நிலம் இருந்தால் இன்னும் பெரிய அளவில் சிறப்பான இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளலாம். எனினும் ஒரு ஏக்கர் நிலத்தில் வெறும் மரம், செடி கொடிகளை மட்டும் நட்டு வளர்பதல்ல நம் திட்டம் – அதில் ஐந்து குடும்பங்களை அல்லது பத்து குடும்பங்களை சுமார் 7௦ பேர் குடியேற்றும் வசதியும் செய்து கொடுக்கலாம். இந்த வீடுகள் அடுக்குமாடி குடியிருப்பாகவே, தனித்தனி வீடுகளாகவோ இருக்கலாம். இவை ஒரு ஏக்கர் நிலத்தின் ஓரத்தில் அல்லது நடுவில் இருக்கலாம்.
விவசாய நிலத்தின் மத்தியில் குடியிருக்கும் பொழுது தோட்டத்தில் இருந்து தூய்மையான காற்றோட்டத்தினை எளிதில் பெற்றுக்கொள்ளலாம்.
தண்ணீர் வசதியின்றி விவசாயம் செய்வது எப்படி சாத்தியம் என்று சிலர் கேட்கலாம்.
உண்மையில் ஒரு தாவரம் தனக்குத் தேவையான சத்துப்பொருட்களை எடுத்துக் கொள்வதை விட ஐந்து மடங்கு சுற்றுப்புறத்திலிருந்து வெட்ட வெளியிலிருந்து தனக்குத் தேவையான வற்றை பெற்றுக் கொள்கிறது. அனால் நமக்கு இதைப்பற்றி எதுவுமே தெரிவதில்லை.
பல ஆண்டுகாலமாக நம் ஆராய்சியாளர்களும் பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் அதன் அடிப்படையில் தான் நாம் இந்தத் திட்டத்தினை செயல்படுத்தப் போகிறோம்.
நிலத்தில் ஈரப்பதம் தொடர்ந்து தக்க வைப்பதற்கு அவர்கள் காட்டும் வழிமுறைகள் இதுதான். முதலில் உயரமாக வளரக்கூடிய நெடியரக மரக்கன்றுகளை நட வேண்டும். அடுத்து சிறு மர ரகங்களை அதன் அடியில் நட வேண்டும். அடுத்து சிறு மர ரகங்களை அதன் அடியில் நட வேண்டும். அதன் பின்னர் அந்த இடை வெளிகளில் புதர்கள் கீரைகள், கிழங்குகள், மூலிகைகள் தானிய வகைகள் என்று அந்த இடைவெளிகளில் நட்டு வளர்க்க வேண்டும்.
இந்த முறையில் அமைத்து செடிகளை வளர்க்கும் பொழுது ஒரு தாவரம் மற்ற தாவரத்திற்கு நிழல் கொடுக்கும் சூரிய ஒளி நேரடியாக நிலத்தில் படாதவாறு இந்த ஒரு ஏக்கர் நிலமும் பசுமை போர்த்திய தாய் இருக்கும். ஈரப்பதமும் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
ஒரு மரம் தன்னைச் சுற்றியுள்ள சுமார் 2௦௦ அடி சுற்றளவிற்கு நிலத்தில் உள்ள ஈரப்பகட்டுரையாளர் யார் என தெரியவில்லை  இருப்பினும்  அவருக்கு நன்றி தத்தினைத் தக்க வைக்கிறது. இதனால் மற்ற செடிகளுக்குத் தேவையான ஈரப்பதத்தினையும் சத்துக்களையும் மற்ற செடிகளுக்கு ஈர்த்துதருகிறது. இவ்வாறு ஒரு ஏக்கர் நிலமும் நீர்ப்பாசன வசதியுமின்றி செழிப்பாக வைத்திருக்க முடியும் தண்ணீர் தேவை எப்பொழுதாவது தேவைப்படும் பொழுது அவ்வப்போது பெய்யும் மழையை ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும் குட்டைகளில் சேகரித்துப் பயன்படுத்தலாம்.
சிறு, சிறு குட்டைகளில் நீர் எப்படி சேகரமாகிறது? அதை எப்பொழுதும் வற்றாமல் வைத்திருப்பதற்கான வழிகள் என்னென்ன என்பதையெல்லாம் நாம் நேரடி வகுப்பகளில் அதைக் கற்றுக் கொடுக்கிறோம்.
இந்த முறை விவசாயத்திற்கு நீர் தேவையே இல்லை. என்பதைப் போல உரங்களும் தேவையில்லை. உண்மையைச் சொல்வதென்றால் இயற்கை விவசாயத்திற்கு உரங்களோ தேவையில்லை. வியாபார நிறுவனங்களும், உறக்கம்பனிகளும் தான் உலகை ஏமாற்றி உரங்களை விற்றுவருகின்றன. விவசாயத்திற்கு உரங்கள் போட்டால்தான் விளையும் என்று ஒரு மாயையை ஏற்படுத்தி இருக்கின்றன. நாம் சொல்லும் இயற்கை விவசாயத்திற்கு உரங்களும் தேவையில்லை. பூச்சிக் கொல்லிகளும் தேவையில்லை அதற்கான அனைத்து வழிமுறைகளையும் நாம் கற்றுக் கொடுத்துவிடுவோம்.

 கட்டுரையாளர் யார் என தெரியவில்லை  இருப்பினும்  அவருக்கு நன்றி










Comments

  1. https://www.youtube.com/watch?v=JuHphe9nlqw
    https://www.youtube.com/watch?v=a2urFyOYiWI

    ReplyDelete

Post a Comment

Popular Posts