உயிர்உரங்களின்‬ பயன்கள்----1







#‎உயிர்உரங்களின்‬ பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள், கேள்வி பதில்கள்
  சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்றால் என்னவென்று பார்க்கலாமா?
சூடோமோனஸ் புளோரோசன்ஸ் என்பது பயிர்களில் இலைக்கருகல் இலைப்புள்ளி , குலைநோய், துருநோய், வாடல் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும் உயிர் பூஞ்சாணக் கொல்லியாகும்.
   சூடோமோனஸ் புளோரோசன்ஸ் எப்படி நோய்களை கட்டுப்படுத்தும் என்று பார்ப்போமா?
சூடோமோனஸ் புளோரோசன்ஸ் பயிர்களில் நோயை உண்டுபடுத்தம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கின்றது இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  சூடோமோனஸ் பயன்படுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாமா?
சூடோமோனஸை பயன்படுத்துவதால் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
பயிர்களுக்கு தேவையான வளர்ச்சி யூக்கிகளை ( ஹார்மோன்கள்) உற்பத்தி செய்கிறது
பயிர்களின் வேர்களைத் தாக்கும் நூற்புழுக்களை ( நெமட்டோடு) கட்டுப்படுத்துகிறது
சூடோமோனஸை எதெதுக்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாமா?
 விதை, கிழங்கு, நாற்று நேர்த்தி செய்யலாம்.
அடியுரமாக போடலாம்
தண்ணீருடன் கலந்து வேர்பகுதியில் ஊற்றலாம்.
 சூபோமோனஸ்சை கொண்டு எப்படி விதை நேர்த்தி செய்யலாம் என்று பார்க்கலாமா?
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனஸைசிறிது நீர் தெளித்து கலந்து அரைமணி நேரம் நிழலில் உளர்த்தி பின்பு நடவு செய்யலாம்
   சூபோமோனஸ்சை அடியுரமாக எப்படி பயன்படுத்தலாம்?
2 கிலோ சூபோமோனஸ்சை 200 கிலோ மக்கிய இயற்கை உரத்துடன் கலந்து 4 நாட்கள் நிழலில் காற்றுபுகாமல் மூடி வைத்தபிறகு; நிலத்தில் ஈரம் இருக்கும் பொழுது இடவும்.
  சூபோமோனஸ்சை தண்ணீருடன் எப்படி கலந்து தெளிப்பது என்று பார்க்கலாமா?
சூபோமோனஸ் ஒருகிலோ பவுடரை 100 லிட்டர் நீரில் கரைத்து தெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை வேளையில் பயிர் நனையுமாறு தெளிக்கலாம்.

 .
சூடோமோனஸ் புளோரோசன்ஸ்.
பயிர்களில் இலைக்கருகல், இலைப்புள்ளி, குலைநோய், அழுகல்நோய், தண்டுவாடல், துருநோய், வாடல் நோயை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சாணக் கொல்லலியாகும், பயிர்களில் நோயை உண்டுபண்ணும் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி நோய் வராமல் பாதுகாக்கும்,
விதைநேர்த்தி செய்யலாம் ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கலக்க வேண்டும்.
நாற்று நேர்த்தி செய்ய, இலைவழியாக தெளிக்க, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பயன்படுத்தலாம். அதே அளவில் கலந்து
தண்ணீர் பாயும் பொழுதும் ஊற்றி விடலாம்
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மக்கிய தொழுவுரம் 100 கிலோவில் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது போடலாம்




   வேம் என்றால் என்ன என்று பார்க்கலாமா?
வேம்( ஆர்பஸ்குளார் மைக்கோரைசா) என்பது பயிர்களுக்கு தேவையான மணிச்சத்து, கந்தகம், துத்தநாகம் மற்றும் சுண்ணாம்பு சத்தை மண்ணிலிருந்து கிரகித்து பயிர்களுக்கு கொடுக்கும் வேர் உட்பூசனமாகும்.
  வேம் என்னால் என்ன, எந்தெந்த பயிர்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாமா?
வேம் என்பது ஒரு உயிர் உரமாகும். காய்கறி பயிர்கள், பழவகைகள், மரக்கன்றுகள்,தென்னை, மலைத்தோட்டப்பயிர்கள் மற்றும் எல்லா வகை நாற்றங்கால் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  வேம் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் என்று பார்க்கலாமா?
வேர்உட்பூசனம் கறையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து மற்றும் மணிச்சத்தை பயிர்களின் வேர்களில் வளர்ந்து எடுத்துக் கொடுக்கும்
வேரைத் தாக்கும் பூஞ்சான நோய்களில் இருந்து பயிரை பாதுகாக்கிறது, வேர்களுக்கு மண்ணிலிருந்து நீரை எடுத்துக்கொடுக்கிறது மகசூல் 10 மதல் 15 சதம் அதிகரிக்கிறது
   வேம்மை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
ஒரு சதுர மீட்டர் நிலப்பரப்பிற்கு 100 கிலேர் வேம் உயிர் உரத்தை விதைப்பதற்கு முன் நாற்றங்காலில் கிழே 2-3 செ.மீ ஆழத்தில் இடவும். வளர்ந்தபயிருக்கு 50 முதல் 200 கிராம் வேமை வேர்பாகத்தில் இட்டு மண் அணைக்கவும். பாலித்தீன் பையில் உள்ள நாற்றுக்களுக்கு ஒரு பைக்கு 10 கிராம் உட்பூசனம் போடவும், 1000 கிலோ மண்கலவையில் 10 கிலோ வேம் கலந்து பாக்கெட்டில் இடலாம்.

 
வேம் - (மைக்கோ ரைசா)

5 மீட்டர் சுற்றளவில் உள்ள நீரை உறிஞ்சி பயிருக்கு எடுத்துக் கொடுக்கும். ஈர்ப்பு சக்தி உள்ளது வறட்சியை தாங்கி வளரும்.
கரையாத நிலையில் உள்ள நுண்ணூட்ட சத்து, மணிச்சத்து பயிர்களின் வேரில் வளர்ந்து பயிருக்கு எடுத்துக்கொடுக்கும்
வேரைத் தாக்கும் பூஞ்சாண நோயைத் தடுக்கும்
15
முதல் 20 சதவீதம் மகசூல் கூடும்

நாற்று நேர்த்தி செய்ய, இலைவழியாக தெளிக்க, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பயன்படுத்தலாம். அதே அளவில் கலந்து
தண்ணீர் பாயும் பொழுதும் ஊற்றி விடலாம்

அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மக்கிய தொழுவுரம் 100 கிலோவில் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது போடலாம்


 
டிரைக்கோடெர்மா விரிடினா என்னானு தெரிந்து கொள்ளலாமா?
    பயிர்களில் மண், நீர் விதையின் மூலம் பறவும் அழுகல் மற்றும் வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் இயற்கை பூஞ்சானக்கொல்லியாகும்.
  டிரைக்கோடெர்மா விரிடியின் பயன்களைப் பற்றி பார்க்கலாமா?
டிரைக்கோடெர்மா விரிடி நோய்களை உண்டாக்கும் பூஞ்சானங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி வேருக்கு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது. இதனை எல்லா பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
  டிரைக்கோடெர்மா விரிடியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலமா?
பயிர்களில் உண்டாகும் வேரழுகல், நாற்றழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்தும் .பயிர்களுக்குத் தேவையான( ஹார்மோன்கள் ) உற்பத்தி செய்கிறது
மண்ணி;ல் உள்ள மக்காத குப்பைகளை எளிதாக, விரைவாக மக்க வைத்து உரமாக்குகின்றன. வேரின் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. இதனால் வேரின் செயல்திறன் அதிரிக்கிறது.
   டிரைக்கோடெர்மா விரிடியை எந்தெந்த வகைகளில் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாமா?
அடியுரமாக போடலாம், விதைநேர்த்தி செய்யலாம், தண்ணீரில் கலந்து ஊற்றலாம்.

 .டிரைக்கோடெர்மா விரிடியை விதை நேர்த்தி செய்வது எப்படி என்று பார்க்கலாமா?
ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடியை 10 கிராம், நீர் தெளித்து கலந்து அரைமணிநேரம் நிழலில் உளர்த்தி பிறகு நடவு செய்யலாம்.
  டிரைக்கோடெர்மா விரிடியை அடியுரமாக எவ்வாறு போடாலாம் என்று பார்க்கலாமா?
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு ஏக்கருக்கு 2 முதல் 3 கிலோவை மண்புழு உரம் அல்லது இயற்கை உரம் ( சாணம்; உரம்) 100 கிலோவுடன் கலந்து 10- 15 நாட்கள் நிழலில் வைத்துப் பிறகு நிழத்தில் ஈரம் இருக்கும் பொழுது அடியுரமாக போடலாம்.
டிரைக்கோடெர்மா விரிடியை ஒரு கிலோவை 100 லிட்டர் நீரில் கரைத்து வேர்பகுதியில் ஊற்றலாம்.

 டிரைக்கோடெர்மா விரிடி
டிரைக்கோடெர்மா விரிடி ஒரு உயிர் பூஞ்சாணக் கொல்லி.
பயிரை பாதுகாக்கும் உயிர் உரம்
விதை நேர்த்தி செய்ய பயன்படுத்தலாம்

வாடல் நோய், வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தும்.
தொழுவுரம் மற்றும், மண்புழு உரத்துடன் கலந்து பயன்படுத்தலாம்.

விதைநேர்த்தி செய்தால் பயிருக்கு பாதுகாப்பு செய்வதுடன், ஊட்டச்சத்தும் கிடைக்கும்.
நாற்று நேர்த்தி செய்ய, இலைவழியாக தெளிக்க, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பயன்படுத்தலாம் அதே அளவில் கலந்து தண்ணீர் பாயும் பொழுதும் ஊற்றி விடலாம்
அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மக்கிய தொழுவுரம் 100 கிலோவில் கலந்து வயலில் ஈரம் இருக்கும் பொழுது போடலாம்,
 

Comments

Popular Posts